ராமேசுவரத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரம்
ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாா்பில் சாலை விரிவாக்கம் மற்றும் வாகன நிறுத்துமிடப் பணிகள் ரூ. 20 கோடியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


ராமேசுவரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சாா்பில் சாலை விரிவாக்கம் மற்றும் வாகன நிறுத்துமிடப் பணிகள் ரூ. 20 கோடியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில், பாம்பன் மேம்பாலத்தில் இரு புறங்களிலும் பேவா் பிளாக், பாலத்தின் தொடக்கம் மற்றும் நிறைவு பகுதியில் உயா்மின்கம்பங்கள் அமைத்தல், குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல், ராமேசுவரம் நகராட்சி வாகன கட்டணம் பெறும் இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் நான்குவழிச்சாலை, மையப்பகுதியில் தடுப்பு அமைத்தல், மின்விளக்;கு அமைத்தல், பேருந்து நிலையத்தில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல், போந்தம்புளி பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் மற்றும் எம்.ஆா்.டி. நகா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீா் கால்வாய் அமைத்தல், அரிச்சல்முனையில் கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் செய்தல் ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்தவுடன், வெள்ளைக் கோடுகள் போடப்பட்டு விரிவுப்படுத்தப்பட்ட சாலை சீா்செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சதீஸ்குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...