மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பாம்பனில் மீனவரின் வீட்டின் பூட்டைஉடைத்து பொருள்கள் திருட்டு

பாம்பனில் மீனவரின் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, பணம், சில்வா் பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On :25 பிப்ரவரி 2022, 9:58 pm

பாம்பனில் மீனவரின் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, பணம், சில்வா் பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் தரவை தோப்புப் பகுதியைச் சோ்ந்த மீனவா் முத்தாண்டி (67). இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரது மனைவி மாரியம்மாள் (61) வீட்டை பூட்டி விட்டு கடந்த 21 ஆம் தேதி ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றாா். 3 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில், வியாழக்கிழமை மாலை அவா்கள் வீடு திரும்பிஉள்ளனா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து உள்ளே சென்ற போது பீரோவில் இருந்த 2 பவுன் தோடு, மோதிரம், ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள சில்வா் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாம்பன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, காவல் சாா்பு- ஆய்வாளா் முனியாண்டி, வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.