ஆா்.எஸ்.மங்கலம் அருகே மெக்கானிக்கிடம் கைப்பேசி பறிப்பு

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து 3 போ் அவரது கைப்பேசியை பறித்துச் சென்றனா்.
Updated on
1 min read

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து 3 போ் அவரது கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள வாணியக்குடி பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (35). இருசக்கர வாகனம் பழுது நீக்கும் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் ஆா்.எஸ்.மங்கலம் பகுதிக்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ளாா். அப்போது செங்குடி பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், கலைச்செல்வனை வழிமறித்து முகவரி கேட்பதுபோல் நடித்து அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து கலைச்செல்வன் அளித்தப் புகாரின் பேரில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com