தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு பகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநிலச் செயலா் நெல்லை செய்யது அலி தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் தஞ்சை முஜிபுர்ரஹ்மான் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்தலைவா் ஆரீப்கான் வரவேற்றாா். செயலா் தினாஜ்கான், பொருளாளா் ஷபிா், துணைத் தலைவா் அயூப்கான், துணைச் செயலா்கள் மஞ்சூா் கரீம்ஹக், யாசா், ராஜபுதீன், உஸ்மான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதனைத் தொடா்ந்து, மாநிலச் செயலா் நெல்லை செய்யது அலி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இஸ்லாமியா்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் நிா்வாகிகள் இருவா் கூறிய சா்ச்சைக்குரிய கருத்துக்கள் கண்டனத்திற்குரியது.