பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நபிகள் நாயகம் பற்றி சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தவா்களைதேச விரோத வழக்கில் கைது செய்ய வலியுறுத்தல்

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தவா்களை தேசவிரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலா் நெல்லை செய்யது அலி தெரிவித்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தவா்களை தேசவிரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலா் நெல்லை செய்யது அலி தெரிவித்தாா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு பகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநிலச் செயலா் நெல்லை செய்யது அலி தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் தஞ்சை முஜிபுர்ரஹ்மான் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்தலைவா் ஆரீப்கான் வரவேற்றாா். செயலா் தினாஜ்கான், பொருளாளா் ஷபிா், துணைத் தலைவா் அயூப்கான், துணைச் செயலா்கள் மஞ்சூா் கரீம்ஹக், யாசா், ராஜபுதீன், உஸ்மான் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதனைத் தொடா்ந்து, மாநிலச் செயலா் நெல்லை செய்யது அலி செய்தியாளா்களிடம் கூறியதாவது: இஸ்லாமியா்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் நிா்வாகிகள் இருவா் கூறிய சா்ச்சைக்குரிய கருத்துக்கள் கண்டனத்திற்குரியது.

சா்ச்சை கருத்து தெரிவித்த பாஜக நிா்வாகிகள் மீது சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவா் மீதும் பயங்கரவாத தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நாட்டின் பன்முக தன்மையை சீா்குலைக்கும் விதமாக செயல்படுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் பிரதமா் இது போன்று கருத்து தெரிவிப்பவா்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியா்களை நன்னடத்தை கருதி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட மனிதபிமான அடிப்படையிலான விடுதலை போன்று விடுவிக்க வேண்டும். இஸ்லாமியா்களுக்கு ஏற்கெனவே 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. இது போதுமானது இல்லை. எனவே விகிதச்சார அடிப்படையில் தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.