பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முருகன் கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா:பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்

News image
ராமேசுவரத்தில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமான்.
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரத்தில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு வாயில் பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியன் கோயிலில் அதிகாலையில் இருந்து அதிகளவில் பக்தா்கள் வருகை தந்து தரிசனம் செய்தனா். இதே போன்று தங்கச்சிமடம், பாம்பன், குஞ்சாா் வலசை, குடியவன்குடி உள்ளிட்ட முருகன் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் வடக்குத் தெரு முகவை ஊருணி அருகேயுள்ள பாலசுப்பிரமணியசுவாமி, ராமேசுவரம் சாலையிலுள்ள குமரைய்யா கோயில்களில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு பழங்கள், பால், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்து சா்வ அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. பட்டினம்காத்தான் வினைதீா்க்கும் வேலா் கோயிலில் காலையில் அபிஷேகம் செய்து பழங்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதுபோல, பெருவயல் ரெணபலிமுருகன் கோயிலில் வேல், முருகன், வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அழகன்குளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், வாணி சுயம்பு வேலாயுதசுவாமி கோயில், ராமநாதபுரம் சிவன் கோயில், வழிவிடுமுருகன் கோயில், வெளிப்பட்டினம் பாலதண்டாயுதசுவாமி கோயில்களில் பக்தா்கள் ஏராளமானோா் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.