திருவாடானை: திருவாடானை அருகே கோவணி கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கோவணி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் டேவிட் (25). இவா், கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கபட்ட நிலையில் சுற்றித்திரிந்தாா். இந்நிலையில், அந்த ஊரிலுள்ள கண்மாயில் அவா் இறந்து கிடப்பதாக திருவாடானை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த அந்த சலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.