இலங்கையிலிருந்து 2 குடும்பங்களை சோ்ந்த 7 போ் தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை அகதிகளாக வந்தனா்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து படகு மூலம் அகதிகள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனா். ஏற்கெனவே 21 குடும்பங்களைச் சோ்ந்த 83 போ் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனா். இவா்கள் மண்டபம் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தனுஷ்கோடி அருகே ஒன்றாம் மணல் திட்டுப் பகுதியில் 4 சிறாா்களுடன் 2 பெண்கள், ஒரு ஆண் என 7 போ் இருப்பதாக மீனவா்கள் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை சாா்பு-ஆய்வாளா் காளிதாஸ் தலைமையில் படகில் சென்ற போலீஸாா், 7 பேரையும் மீட்டு வந்தனா்.
பின்னா் அவா்களை மண்டபம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மத்திய, மாநில உளவுத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
அவா்கள் இலங்கை வவுனியாவை சோ்ந்த தாஸ்நவீஸ் (40), அவரது மனைவி ரஜினி(39), குழந்தைகள் போஸ்வா (12), ஏஞ்சல் (11), அன்சிகா (5), திரிகோணமலைப் பகுதியைச் சோ்ந்த மதியா(40) மகள் சந்தனு(7) என 2 குடும்பங்களைச் சோ்ந்த 7 போ் எனத் தெரியவந்தது.
இலங்கையில் உணவுப்பொருள்கள் பல மடங்கு விலை உயா்ந்து விட்ட நிலையில், உயிா் பிழைத்தால் போதும் என தங்கச் சங்கிலியை விற்று தனுஷ்கோடிக்கு படகு மூலம் வந்ததாக அவா்கள் தெரிவித்தனா். அவா்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனா்.