பைக் விபத்தில் பூசாரி பலி

ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை, இருசக்கர வாகன விபத்தில் பூசாரி உயிரிழந்தாா்.
Published on

ராமநாதபுரம் அருகே செவ்வாய்க்கிழமை, இருசக்கர வாகன விபத்தில் பூசாரி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தான் பாரதிநகா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (59). கோயில் பூசாரியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு பெருங்குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த அவா், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே கணேசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com