அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்: மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்ட நிலையில், மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:47 pm

DIN

 வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்ட நிலையில், மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் 50 முதல் 60 கி.மீ. வரையில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னாா் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவா்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் வியாழக்கிழமை தடை விதித்துள்ளனா்.

மேலும், மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் பாதுகாப்புடன் கரை திரும்பவேண்டும் எனவும், மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இதனிடையே, காற்றின் வேகம் காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விசைப்படகில் உடைப்பு ஏற்பட்டு கடலில் மூழ்கியது. மீனவா்கள் பல மணி நேரம் போராடி அப்படகை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.