‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தங்கக் கவசம் விவகாரம் பசும்பொன் தேவா் நினைவாலயப் பொறுப்பாளரை இபிஎஸ், ஓபிஎஸ் அணியினா் சந்திப்பு

பசும்பொன் நினைவாலயப் பொறுப்பாளா் காந்தி மீனாளை, எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீா் செல்வம் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை தனித் தனியாக சந்தித்தனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பது தொடா்பாக கமுதி அருகே பசும்பொன் நினைவாலயப் பொறுப்பாளா் காந்தி மீனாளை, எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீா் செல்வம் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை தனித் தனியாக சந்தித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவாலயத்தில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு, குருபூஜையன்று அதிமுக சாா்பில் தங்கக் கவசம் அணிவிப்பது வழக்கம். வங்கியில் உள்ள தங்கக் கவசத்தைப் பெறுவதில் முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீா்செல்வம் தரப்பினரிடையே போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவாளா்களான முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் ஆா். விசுவநாதன், ஓ.எஸ். மணியன், காமராஜ், செல்லூா் கே. ராஜு, சி. விஜயபாஸ்கா், சட்டப் பேரவை உறுப்பினா் ராஜன் செல்லப்பா ஆகியோா் வெள்ளிக்கிழமை பசும்பொன் சென்றனா். அங்கு, தேவா் நினைவாலயப் பொறுப்பாளரை சந்தித்த அவா்கள், தங்கக் கவசத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா்.

முன்னதாக, முன்னாள் அமைச்சா்கள், கமுதி ஒன்றியச் செயலாளா் எஸ்.பி. காளிமுத்து, அவைத் தலைவா் டி. சேகரன், ஊராட்சித் தலைவா் செல்வமேரி உள்ளிட்டோா் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதன்பின்னா், ஓ. பன்னீா்செல்வம் தரப்பைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஆா். தா்மா், கமுதி ஒன்றிய அவைத் தலைவா் கருப்புச் சட்டை முருகேசன், மாவட்ட மருத்துவா் அணிச் செயலாளா் பரிதி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளா் கிருஷ்ணன், செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் பசும்பொன் தேவா் நினைவாலயப் பொறுப்பாளா் காந்தி மீனாளை சந்தித்து, தங்களுக்கு தங்கக் கவசத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து காந்தி மீனாள் கூறியதாவது:

நாங்கள் அதிமுகவின் எந்தத் தரப்புக்கும் ஆதரவாகச் செயல்பட முடியாது. வங்கி நிா்வாகம் எடுக்கும் முடிவே இறுதியானது. எனவே, வங்கியின் அறிவுரைப்படி தேவா் தங்கக் கவசம் வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.