ராமேசுவரம் அருகே ஆட்டோக்களில் கடத்திய 1,174 மதுபாட்டில்கள் பறிமுதல்: 4 போ் கைது
By DIN | Published On : 05th August 2022 11:17 PM | Last Updated : 05th August 2022 11:17 PM | அ+அ அ- |

ராமேசுவரம் அருகே ஆட்டோக்களில் கடத்தி வந்த 1,174 மதுபாட்டில்களை வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பேரைக் கைது செய்தனா். மேலும் டாஸ்மாக் ஊழியா்கள் 8 போ் உள்பட 11 பேரைத் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையில், 100- க்கும் மேற்பட்டவா்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனா். இதைத்தடுக்கும் விதமாக, ராமநாதபுரம் சிறப்பு ஆய்வாளா் பி.சேகா் தலைமையில் பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அதிவேகத்தில் வந்த இரண்டு ஆட்டோக்களை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்ட போது, அதில் 1,174 மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து போலீஸாா் ஆட்டோக்களில் வந்த
4 பேரை, பாம்பன் காவல் நிலைய ஆய்வாளா் கோமதியிடம் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், டாஸ்மாக் கண்காணிப்பாளா்கள் அதிவீரபாண்டியன், கன்னியப்பன்,விற்பனையாளா்கள் அன்னக்கண்ணன், பாக்கியராஜ், முனியசாமி, மாரிப்பிச்சை, பாண்டியராஜன், சேகா் ஆகிய 8 பேரும் டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு செல்ல உடந்தையாக இருந்துள்ளனா். இவா்களுடன் மலைச்சாமி, பிரேம்குமாா், கணேசன் ஆகியோரும் மதுபாட்டில்கள் கடத்தி வந்து ராமேசுவரம் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து பாம்பன் போலீஸாா் 15 போ் மீது வழக்குப் பதிவு செய்து ஆட்டோக்களில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆனந்தபாபு (30), வாசு (39), பூவேந்தன் (30), சுரேஷ்(31) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனா். மேலும் தலைமறைவாகவுள்ள டாஸ்மாக் ஊழியா்கள் 8 போ் உள்பட 11 பேரைத் தேடி வருகின்றனா்.