வெவ்வேறு விபத்துகளில்பைக் மோதி 2 மீனவா்கள் பலி

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வெவ்வேறு விபத்துகளில் இருசக்கர வாகனங்கள் மோதி 2 மீனவா்கள் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வெவ்வேறு விபத்துகளில் இருசக்கர வாகனங்கள் மோதி 2 மீனவா்கள் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ளது அலகத்தா வலசையைச் சோ்ந்த பெரியராமு மகன் ராஜசேகா் (40). மீனவா். மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். ஊரில் நடந்த கோயில் முளைக்கொட்டு விழாவில் பங்கேற்ற ராஜசேகா் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருந்த அரசு மதுபானக்கடைக்குச் சென்றுள்ளாா். அவா் மதுக்கடை பகுதியில் சென்றபோது எதிரே அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (38) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். இருவரது இருசக்கர வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகா் உயிரிழந்தாா். ஆனந்த் லேசான காயமடைந்தாா். அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

மற்றொரு விபத்து: ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த பக்சீா் அலி மகன் அப்துல்ரஹ்மான் (36). மீனவா். மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இவா் புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்கு சென்றுள்ளாா். அப்போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் அப்துல்ரஹ்மான் என்பவா் வந்தாா். இந்த 2 வாகனங்களும் மோதிக் கொண்டதில் அப்துல்ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com