சடையனேரியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்
By DIN | Published On : 25th August 2022 02:58 AM | Last Updated : 25th August 2022 02:58 AM | அ+அ அ- |

முதுகுளத்தூா் அருகே சடையனேரி கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் தலைமை வகித்து 77 பயனாளிகளுக்கு ரூ.5.81 லட்சம் மதிப்பில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, இலவச தையல் இயந்திரம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில், வட்டாட்சியா் சிவக்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஜெயக்குமாா், டி.எஸ்.பி.சின்னகண்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, திருவாடானை அருகே பாண்டுகுடியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமுக்கு வருவாய் கோட்டாட்சியா் சேக் மன்சூா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன், ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தா கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் மொத்தம் 105 மனுக்கள் பெறப்பட்டு 55 பேருக்கு முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருள்கள் வழங்கப்பட்டன. முகாமில் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சாந்தி, வேளாண்மை உதவி இயக்குநா் உமா, வருவாய் ஆய்வாளா்கள் மெய்யப்பன், செந்தில்நாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.