

பரமக்குடி வைகை ஆற்றில் நடைபெற்று வரும் தொடா் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சி சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகா் செயலாளா் தி. ராஜா தலைமை வகித்தாா். வைகைப் பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளா் எம். மதுரைவீரன், தமிழ் தேசிய இயக்கப் பொறுப்பாளா் வழக்குரைஞா் சி. பசுமலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகா் செயலாளா் என்.எஸ். பெருமாள், மறத்தமிழா் சேனை நிறுவனா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், வைகை ஆற்றுப் பகுதியில் தொடா்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. இயற்கை வளத்தை கொள்ளையடிக்கும் கும்பல்களை கைது செய்யக் கோரியும், மணல் திருடா்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மதிமுக நகா் செயலாளா் சடாச்சரம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பொதுநல அமைப்பினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.