பாம்பனில் வெள்ளிக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளையை அடுத்துள்ள குஞ்சாா் வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (53). இவா் பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறாா். சமீப காலமாக கடையால் போதிய வருமானம் இல்லாததால், செல்வராஜ் தனது மகன் விக்னேஸ்வரனை (23) வேலைக்குச் செல்லுமாறு கூறினாா்.
வேலைக்கு செல்ல விரும்பாத விக்னேஷ்வரன் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில், பாம்பன் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் முனியாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.