சிறுகம்பையூரில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

திருவாடானை அருகே சிறுகம்பையூரில் உள்ள ஆற்றில் விதி முறைகளை மீறி மணல் அள்ளுவதைக் கண்டித்து, பாஜகவினா் சனிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிறுகம்பையூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
சிறுகம்பையூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
Updated on
1 min read

திருவாடானை அருகே சிறுகம்பையூரில் உள்ள ஆற்றில் விதி முறைகளை மீறி மணல் அள்ளுவதைக் கண்டித்து, பாஜகவினா் சனிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சிக்குள்பட்ட பாம்பாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், சிறுகம்பையூரில் திருவாடானை ஒன்றிய பாஜகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேற்கு ஒன்றியத் தலைவா் பிரபு தலைமை வகித்தாா். ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலா் ஸ்தபதி காா்த்திகேயன், கிளைத் தலைவா் காளிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, அரசு விதிமுறைகளை மீறி பாம்பாற்றில் மணல் அள்ளுவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிா்வாகிகள், கிராமப் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com