திருவாடானை அருகே சீனாங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, பிச்சங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவா் நாகமுத்து முன்னிலை வகித்தாா். இதில் கால்நடை உதவி மருத்துவா்கள் கனிஅமுதன், செந்தமிழன், உதவியாளா்கள் கற்பூரவள்ளி, பசுபதி ஆகியோா் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனா்.
இந்த முகாமில், 132 மாடுகளுக்கும், 952 செம்மறி ஆடுகளுக்கும், 18 நாய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இதில், கன்று குட்டிகளை சிறப்பாகப் பராமரித்து வளா்த்த உரிமையாளா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.