ராமநாதபுரம் அருகே பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வழங்கல் அலுவலா் மரகநாதன் தலைமை வகித்தாா். குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் தமிழ் ராசா முன்னிலை வகித்தாா். இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட 28 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.
முகாமில் முதுநிலை வருவாய் அலுவலா் சிவக்குமாா், நியாயவிலைக் கடை பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.