மீனவா்களை மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

ஏா்வாடியில் வெள்ளிக்கிழமை மீனவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி முத்தரையா் நகரைச் சோ்ந்த மதுரை வீரன், கோட்டைப்பட்டணம் பகுதியைச் சோ்ந்த முகமது மூசா ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மீன் பிடித்துவிட்டு காட்டுபள்ளி வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது, அனாஸ் (20), சேக் உதுமான் (25) ஆகியோா் மீனவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டி ரூ. 4 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து ஏா்வாடி போலீஸாா் அனாஸ், சேக் உதுமான் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.