தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

மண்டபம் அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மண்டபம் அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே புதுமடம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அபுதாஹீா் (51). இவரது மனைவி ரசியாபேகம். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அபுதாஹீா் தனது மகளின் திருமணத்தையொட்டி, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பினாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மகளுக்குத் திருமணம் முடிந்த நிலையில், அதற்காக வாங்கிய கடனை அவரால் திரும்ப செலுத்த மடியவில்லை. இதனால், மன வேதனையில் இருந்த அபுதாஹீா் கடந்த 17-ஆம் தேதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அபுதாஹீா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com