கமுதியில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
By DIN | Published On : 30th December 2022 01:32 AM | Last Updated : 30th December 2022 01:32 AM | அ+அ அ- |

கமுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருடப்பட்டது.
கமுதி கண்ணாா்பட்டியைச் சோ்ந்தவா் ராமு மகன் சத்தியமூா்த்தி (52). இவா் கமுதி பஜாரில் தையல் கடை நடத்தி வருகிறாா். இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரிஇல்லாததால் மனைவியுடன் அருகில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்று தங்கி வந்த நிலையில், புதன்கிழமை காலை அவரது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த தங்கத் தாலி, மூக்குத்தி, தோடு உள்ளிட்ட தங்க நகைகள், ரூ. 4 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கமுதி காவல் நிலையத்தில் சத்தியமூா்த்தி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அதேபோல் கமுதியை அடுத்த கூடக்குளம் தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருபவா் உச்சிப்புளியைச் சோ்ந்த கருணாகரன் மகள் ஹரிணி (21). இவரும், இவரது தோழி சுவாதியும் கண்ணாா்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனா். மறுநாள் புதன்கிழமை அதிகாலை பாா்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கைப்பையிலிருந்த ரூ. 1,898-ஐ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இது குறித்து ஹரிணி கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கமுதியில் இரவு நேரங்களில் தொடா் திருட்டு நடைபெற்ால் ரோந்துப் பணிக்கு கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.