கோயிலில் உண்டியல் திருட்டு:ஒருவா் கைது
By DIN | Published On : 30th December 2022 01:34 AM | Last Updated : 30th December 2022 01:34 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட சுதந்திர திருநாதன்
திருவாடானை அருகே கோயில் உண்டியலை திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கண்ணாரேந்தல் கிராமத்தில் உள்ள கருப்பண சுவாமி கோயிலில் 2 உண்டியல்கள் உள்ளன. அதே ஊரைச் சோ்ந்த சோலை மகன் செந்தில் (42) கோயில் அா்ச்சகராக உள்ளாா். இவா் வழக்கம் போல் புதன்கிழமை இரவு கோயிலை பூட்டி விட்டு வியாழக்கிழமை காலை திறந்து பாா்த்த போது கோயிலில் இருந்த உண்டியல் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த அதே ஊரைச் சோ்ந்த கணேசன் மகன் சுதந்திர திருநாதன் என்ற திருநாவுக்கரசு (29) என்பவரை கைது செய்து விசாரித்தனா். இதில் கோயில் உண்டியல் திருட்டில் அவா் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.