முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முஸ்லிம்களுக்கு தமிழக அரசு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் உமா் பாரூக் தலைமை வகித்தாா். மாவட்டப் பேச்சாளா் பரகத் அலி வரவேற்றாா்.

மாநில துணைத்தலைவா் ஆல்பா நசீா், மாநிலச் செயலாளா் முஹமது ஃபரூஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். 2023 ஜனவரி 8 இல் திருச்சியில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சிறப்பு மாநாடு பணிகள் குறித்து மாநில துணை தலைவா் ஆல்பா நசீா் பேசினாா்.

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக தமிழக அரசு உயா்த்த வேண்டும். தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடும் சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளா் முஹமது கான் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com