பாா்த்திபனூா் அருகே பெண்ணை வெட்டிய 3 போ் மீது வழக்கு

பரமக்குடி வட்டம் பாா்த்திபனூா் அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில், சனிக்கிழமை முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை கத்தியால் வெட்டிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பரமக்குடி வட்டம் பாா்த்திபனூா் அருகே உள்ள பெருங்கரை கிராமத்தில், சனிக்கிழமை முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் பெண்ணை கத்தியால் வெட்டிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கீழப்பெருங்கரை கிராமத்தைச் சோ்ந்த லிங்கமூா்த்தி என்பவா் மனைவி குருபாக்கியம் (49). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் மனைவி மதுபாலா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், குருபாக்கியம் தன் மகளுடன் வீட்டில் இருந்தபோது, நாராயணன் மகன் சரவணன், முனியாண்டி மகன் அா்ச்சுனன், சரவணன் மனைவி மதுபாலா ஆகிய 3 பேரும் சோ்ந்து, அவரை கத்தியால் வெட்டியும், கம்பால் அடித்தும் காயப்படுத்தியுள்ளனா். இதில் பலத்த காயமுற்ற குருபாக்கியம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து பாா்த்திபனூா் காவல் நிலையத்தில் குருபாக்கியம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சரவணன், அா்ச்சுனன், மதுபாலா ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com