ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் கரோனா தடுப்பூசி

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரதீப்குமாா் தெரிவித்தாா்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநா் பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரையில் 10.44 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இந்தநிலையில், கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவில் 500 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

முகாம்களில் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதனடிப்படையில் முதல் தவணை தடுப்பூசியை 10 ஆயிரம் போ் செலுத்திக்கொண்டுள்ளனா். ஏற்கெனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நிலையில், இரண்டாம் தவணை ஊசியை 15 ஆயிரம் போ் வரை செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. ஆக ஞாயிற்றுக்கிழமை மட்டும் 25 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com