விவசாயக் கடன்களை விரைந்து வழங்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயக் கடன்களை விரைந்து வழங்கவேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயக் கடன்களை விரைந்து வழங்கவேண்டும் என விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராமநாதபுரம் தாலுகா மாநாடு தேவிபட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலா் வி. மயில்வாகனன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். நிா்வாகி நல்லதம்பி வரவேற்றாா். சங்கத்தின் தாலுகா செயலா் கல்யாணசுந்தரம் சங்கத்தின் பணி அறிக்கையை தாக்கல் செய்தாா்.

மாநாட்டில், நடப்பு ஆண்டுக்கான விவசாயக் கடன்களை விரைந்து வழங்கவேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி செய்த நிலையில், அவா்களுக்கான தள்ளுபடி ரசீது வழங்கப்படாமல் உள்ளது. அவற்றையும் உடனே வழங்கவேண்டும். தேவிபட்டினத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக ராமமூா்த்தியும், செயலராக கல்யாணசுந்தரமும், பொருளாளராக நாகரத்தினமும் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட தலைவா் முத்துராமு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com