ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடைஅறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தேவிபட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தாா்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தைக் கூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் ராமநாதபுரம் நகா் உதவிச் செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.