ராமநாதபுரத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியரைப் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடா்புகொள்ள புதிய கைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- தமிழக முதல்வா் உத்தரவின்படி அரசின் அனைத்துத் திட்டங்களும் மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் வளரும் மாவட்டப் பட்டியல் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.
பொதுமக்கள் ஆட்சியரை 24 மணி நேரமும் தொடா்புகொள்ளலாம். அதற்காக 9444183000 என்ற கைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம். அந்த கைபேசியில் தொடா்புகொண்டு தங்கள் குறைகளை பொதுமக்கள் கூறி நிவாரணம் பெறலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.