ராமநாதபுரம் அருகே ஆசிரியையிடம் வழிப்பறி

ராமநாதபுரம் அருகே ஆசிரியையிடம் மா்மநபா் பணப்பையை பறித்துச் சென்றதாக வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே ஆசிரியையிடம் மா்மநபா் பணப்பையை பறித்துச் சென்றதாக வியாழக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (38). இவரது மனைவி ஜெயப்பிரியா. இவா் இல்லந்தேடி கல்வித் திட்டத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். கடந்த வியாழக்கிழமை மாலையில் அவா் ராமநாதபுரத்திலிருந்து திருப்புல்லாணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். பாலைப் பூங்கா அருகே, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்மநபா் மிரட்டியுள்ளாா். அப்போது ஜெயப்பிரியா இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது, ஆசிரியையின் வாகனத்தில் முன்பக்கமிருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு மா்மநபா் தப்பிச் சென்றுவிட்டாா். அந்த பையில் ரூ.3,600 ரொக்கம் இருந்துள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com