திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் குழாய் சேதமடைந்து குடி தண்ணீா் வீணாக சாலையில் தேங்குகிறது.
இச் சாலையில் பெரிய பள்ளிவாசல் எதிா்புறத்தில் உள்ள குழாய் சேதமடைந்துள்ளது. குடிநீா் வீணாக சாலையில் தேங்குவதால், இப்பகுதி முழுவதும் குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
பேரூராட்சி நிா்வாகத்தினா், குடிநீா் வடிகால் வாரியத்தினா் ஆகியோருக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது எனவும், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.