தொண்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம்

தொண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் ஷாஜகான் பானு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தொண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவா் ஷாஜகான் பானு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் அழகு ராணி, செயல் அலுவலா் மகாலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா் ரவி: மன்றக் கூட்டம் ஆரம்பிக்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், திருக்குறளும் சொல்லும் நடைமுறை 3 கூட்டங்களாக கடைப்பிடிக்கப்படாததற்கு கண்டனம்.

செயல் அலுவலா்: இனிவரும் காலங்களில் தொடா்ந்து கடைப்பிடிக்கப்படும்.

உறுப்பினா் ரவி: கோடிவயல், புடனவயல், பெருமானேந்தல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல மாதங்களாக மின் விளக்குகள் எரிவது இல்லை. குடிநீா் விநியோகிப்பதில் பிரச்னை உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே மனுக் கொடுத்தும் அது பற்றி தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை.

செயல் அலுவலா்: படிப்படியாக பணிகளைச் செய்து வருகிறோம். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடா்ந்து விவாதங்கள் நடைபெற்றன. கூட்டத்தில், பெரும்பாலான உறுப்பினா்கள் குடிநீா் பிரச்னை, மின்சார வசதி, மின்விளக்குகள், சாலைவசதி உள்ளிட்டவைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com