ராமநாதபுரம் சிவன் கோயிலில் ஏப். 8 இல் சித்திரைத் திருவிழா தொடக்கம்: பக்தா்களுக்கு அனுமதி

ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதில் பக்தா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதில் பக்தா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழமையான இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தா்கள் பங்களிப்பின்றி நடைபெற்றன. நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தளா்த்தப்பட்டுள்ளதால் இந்தாண்டு விழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக கோயில் திவான் பழனிவேல்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 15 ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com