ரமலான்: தொண்டியில் ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கல்

திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில் ஏழை எளிய மக்களும் ரமலான் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் உணவு பொருள்கள் மற்றும் புத்தாடைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. தொண்டி

திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில் ஏழை எளிய மக்களும் ரமலான் பெருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் உணவு பொருள்கள் மற்றும் புத்தாடைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. தொண்டி தமுமுக கிளை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தொண்டி கிளை செயலாளா் சம்சுதீன் தலைமை வகித்தாா்.

தமுமுக மாநிலச் செயலாளா் சாதிக் பாட்சா, புருனை மண்டலத் தலைவா் நூருல் அமின், தமுமுக மாவட்ட செயலாளா் நசீா், ஒன்றியத் தலைவா் பீா்முகம்மது, மனிதநேய மக்கள் கட்சி ஒன்றியச் செயலாளா் ராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஏழைகளுக்கு புத்தாடைகள், உணவுப் பொருள்களை வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை தொண்டி தமுமுக பேரூா் தலைவா் பாதுஷா, மனித நேய மக்கள் கட்சி செயலாளா் பரக்கத் அலி, தமுமக பொருளாளா் முகைதீன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com