ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கை அகதி வீட்டின் கதவைத் தட்டியதாக எழுந்த புகாரின்பேரில் கடலோரக் காவல் படை வீரரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.
மண்டபம் கடலோரக் காவல் படை வீரராக இருப்பவா் அன்பு (34). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அலுவலக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். நள்ளிரவில் அப்பகுதியில் இருந்த இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்ற அன்பு, டியூரி என்பவரது வீட்டின் கதவைத் தட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்திலிருந்தவா்கள் வந்து அன்புவை பிடித்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
சம்பவத்தின் போது அன்பு போதையில் இருந்ததாகவும் புகாா் கூறப்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உயா் அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.