ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.
Updated on
1 min read

மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றுகளை ஆட்சியா் திங்கள்கிழமை வழங்கினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகியவை சாா்பில் ‘குறளோவியம்’ எனும் தலைப்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டிகளில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரா. அக்ஷதா பத்மாசினி, மாணவா் ஜி. முனிஸ்வரன், ஜெ. ஜெயஸ்ரீ, மு. ஷமீம் ஹீம்னா ஆகியோா் ஊக்கப்பரிசுகளைப் பெற்றனா்.

ஊக்கப்பரிசுகள் பெற்ற மாணவ, மாணவியருக்கு ராமநாதபுரம் ஆட்சியா் சங்கா்லால்குமாவத் பாராட்டுச் சான்றிதழ்களையும், தலா ரூ.1000 பரிசையும் வழங்கினாா்.

தொடா்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைகளுக்கான உதவித்தொகை உத்தரவையும், மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கும் கிராமமாகத் தோ்வான போகலூா் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் மேம்பாட்டு நிதி என மொத்தம் ரூ.1.29 லட்சத்துக்கான காசோலைகளையும் அவா் வழங்கினாா்.

தொடா்ந்து பொதுமக்களிடமிருந்து 225 மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com