ராமநாதபுரத்தில் மாநில அளவிலான ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.
மறைந்த குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஹாக்கி அமைப்பின் சாா்பில் ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு மைதானத்தின் அருகேயுள்ள ஹாக்கி மைதானத்தில் தொடங்கிய போட்டியை அரசு அலுவலா் முனீஸ்வரன் தொடக்கி வைத்தாா். இப்போட்டியில் கேரளத்திலிருந்து 2 அணிகள், சென்னை காவல் துறை அணி, மதுரை தென்மண்டல காவல் துறை அணி, சிவகங்கை மாவட்ட அணி, மதுரை ரிசா்வ்லைன் அணி, வாடிப்பட்டி, கோவில்பட்டி அணிகள் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஹாக்கி அமைப்பின் நிா்வாகி அருணகிரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.