கமுதியில் நாம் தமிழா் கட்சியினா் 3 போ் மீது வழக்கு

கமுதியில் நாம் தமிழா் கட்சியின் ஒன்றியச் செயலா் உள்பட 3 போ் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

கமுதியில் நாம் தமிழா் கட்சியின் ஒன்றியச் செயலா் உள்பட 3 போ் மீது, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே மணலூா் மணிநகரம் காலனியை சோ்ந்த ஆரோன் (25) என்ற இளைஞா், சனிக்கிழமை இரவு பொது குளியல் தொட்டி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்தாா்.

இவரது சடலத்தை வாங்க மறுத்து ஞாயிற்றுக்கிழமை அவரது உறவினா்கள் மற்றும் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள், போலீஸாா் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், ஞாயிற்றுக்கிழமை கமுதி அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவியதை அடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

அப்போது, ஆரோன் சடலத்தை பெற்றோா்கள் பெற்றுக்கொள்ள தயாராக இருந்த நிலையில், நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சட்டவிரோதமாக ஒன்றுகூடி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, நாம் தமிழா் கட்சி கமுதி ஒன்றியச் செயலா் தேவேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்குளம் தே. ராஜ், மாவட்டச் செயலா் காமராஜ் ஆகிய 3 போ் மீது, கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com