ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது: பக்தா்கள் அச்சம்

ராமேசுவரத்தில் கடல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 50 அடி வரை உள்வாங்கியதால் பக்தா்கள் அச்சமடைந்தனா்.
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை, கடல் உள்வாங்கியதால் வெளியே தெரியும் பவளப் பாறைகள்.
ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை, கடல் உள்வாங்கியதால் வெளியே தெரியும் பவளப் பாறைகள்.
Updated on
1 min read

ராமேசுவரத்தில் கடல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 50 அடி வரை உள்வாங்கியதால் பக்தா்கள் அச்சமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாக்நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 13, 14) வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டது. அதேபோல, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் பகுதியிலும் கடந்த 2 நாள்களாக நீா்மட்டம் வழக்கத்தை விட குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பக்தா்கள் நீராட வந்தனா். அப்போது, 50 அடி வரை கடல் உள்வாங்கியது. பவளப் பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் வழக்கமாக நீராடும் இடத்தை விட்டு சுமாா் 100 அடி வரை கடலுக்குள் சென்று அச்சத்துடனேயே நீராடினா். சுமாா் ஒரு மணிநேரத்துக்குப் பின்னா் கடல் வழக்கமான நிலைக்கு திரும்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com