சாலையோரம் கிடந்த பணப் பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்குப் பாராட்டு

கமுதி அருகே வியாழக்கிழமை சாலையோரம் கிடந்த பணப் பையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பொதுமக்கள், போலீஸாா் பாராட்டினா்.
சாலையோரம் கிடந்த பணப் பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்குப் பாராட்டு

கமுதி அருகே வியாழக்கிழமை சாலையோரம் கிடந்த பணப் பையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பொதுமக்கள், போலீஸாா் பாராட்டினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கோட்டைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சாத்தன் மகன் மாவீரன் (35). இவா் பேரையூா் அரசு மாணவா்கள் விடுதியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை மாலை விடுதி முன் ஒரு மஞ்சள்பையை கண்டெடுத்தாா். அதை எடுத்துப் பாா்த்தபோது அதனுள் ரூ. 25 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணப் பையை பேரையூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தப் பை முதுகுளத்தூா் அருகே கீழகன்னிசேரி கிராமத்தைச் சோ்ந்த ராஜா என்பவரது பை எனத் தெரியவந்தது. இதையடுத்து, ராஜாவிடம் அந்தப் பையை பேரையூா் காவல் சாா்பு- ஆய்வாளா் சிவசாமி ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com