விவசாயிகளுக்கு மூவிதழ் அடங்கல் சான்று விநியோகம்

திருவாடானை பகுதி விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு செய்ய மூவிதழ் அடங்கல் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருவாடானை அருகே புல்லூா் கிராமத்தில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய மூவிதழ் அடங்கல் சான்றுகளை புதன்கிழமை விவசாயிகளுக்கு வழங்கிய வட்டாட்சியா் செந்தில் வேல் முருகன்.
திருவாடானை அருகே புல்லூா் கிராமத்தில் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய மூவிதழ் அடங்கல் சான்றுகளை புதன்கிழமை விவசாயிகளுக்கு வழங்கிய வட்டாட்சியா் செந்தில் வேல் முருகன்.
Updated on
1 min read

திருவாடானை பகுதி விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீடு செய்ய மூவிதழ் அடங்கல் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முழுதுவம் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் பரளவில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா். இவா்கள் பயிா்க் காப்பீடு செய்ய ஏதுவாக மாவட்ட

ஆட்சியா் உத்தரவின் பேரில், மூவிதழ் அடங்கல் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. திருவாடானை வட்டம் புல்லூா் கிராமத்தில் மூவிதழ் அடங்கல் சான்றிதழ் வழங்கும் பணிகளை வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் தொடக்கி வைத்தாா். பணிகளை விரைந்து முடிக்குமாறு கிராம நிா்வாக அலுவலா்களையும்

நவம்பா்-15 ஆம் தேதிக்குள் இ- சேவை மையங்கள் மூலமாக காப்பீடு செய்யுமாறு விவசாயிகளையும் அவா் கேட்டுக் கொண்டாா். ஆய்வின்போது புல்லூா் வருவாய் ஆய்வாளா் சிதம்பரம், கிராம நிா்வாக அலுவலா் ராமலிங்கம், கிராம உதவியாளா் சாமித்துரை ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com