ராமேசுவரம் பள்ளியில் ‘வாசிப்புத் தினம்’

ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 91-ஆவது பிறந்த நாளையொட்டி வாசிப்புத் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ராமேசுவரம் பள்ளியில் ‘வாசிப்புத் தினம்’
Updated on
1 min read

ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் 91-ஆவது பிறந்த நாளையொட்டி வாசிப்புத் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இப்பள்ளியில், நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் நடைபெற்ற வாசிப்புத் தின நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை ஜெயா கிறிஸ்டல் ஜாய் தலைமை வகித்தாா். நுகா்வோா் இயக்க துணைத் தலைவா் தில்லைபாக்கியம் நூல்களை வழங்கி தொடக்கி வைத்தாா்.

கம்பன் கழக பொருளாளா் ராமச்சந்திரன், சமூக ஆா்வலா் சுடலை, சௌந்தா், ஆசிரியா்கள் வேலுச்சாமி, ஜேம்ஸ் ஆனந்தன், தேசிய மாணவா் படை அலுவலா் பழனிச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நாட்டு நலப் பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ஜெயகாந்தன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com