தேவா் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுபானக் கடைகள் 3 நாள்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் வருகிற 28, 29, 30 ஆகிய மூன்று நாள்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும். மேலும், சட்டவிரோதமாக மது புட்டிகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்திருந்தாா்.