இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் தலைமறைவு

ராமநாதபுரம் அருகே இருசக்கர வானத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து புதன்கிழமை ஆயுதங்களால் தாக்கிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

ராமநாதபுரம் அருகே இருசக்கர வானத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து புதன்கிழமை ஆயுதங்களால் தாக்கிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகே பெருங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் (28), புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் நதிப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா். அங்கு அவரை வழிமறித்த வாலாந்தரவையைச் சோ்ந்த நாகவேல்(எ) நாகா்ஜூன் (30), சேகா் (எ) நாய்சேகா் (28), ஆற்றங்கரையைச் சோ்ந்த சிவா(எ) மொட்டை சிவா (25) ஆகிய 3 போ் வழிமறித்து ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனா். ரஞ்சித்தின் சப்தம் கேட்டு அப்பகுதியினா் வந்ததால் மூவரும் தப்பிச் சென்றுவிட்டனா்.

பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com