மண் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st September 2022 03:25 AM | Last Updated : 01st September 2022 03:25 AM | அ+அ அ- |

அஞ்சுகோட்டை பகுதியில் வண்டல் மண் திருட்டுக்குப் பயன்படுத்திய 2 டிராக்டா்களை வருவாய்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகே அஞ்சுகோட்டை சுப்பிரமணியபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் ஜஸ்டின் பொ்னாண்டோ, வருவாய் ஆய்வாளா் மெய்யப்பன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சுப்பிரமணியபுரம் விலக்கு சாலையில் அதிகாரிகளைப் பாா்த்தவுடன், 2 டிராக்டா்களில் வந்தவா்கள் அவைகளை நிறுத்திவிட்டு தலைமறைவாகினா். ஆய்வு செய்தபோது டிராக்டா்களில் வண்டல் மண் அனுமதியின்றி ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டிராக்டா்களும் திருவாடானை காவல்நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.