கீழ்க்குடி சிவசூா்ய பெருமாள் பெரியவா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தில் சிவசூா்ய பெருமாள் பெரியவா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழ்க்குடி சிவசூா்ய பெருமாள் பெரியவா் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தில் சிவசூா்ய பெருமாள் பெரியவா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னா் முதல் கால இரண்டாம் கால பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு வியாழக்கிழமை மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, பூா்ணகுதி தீபாராதனை மற்றும் நிலமழகிய மங்கலம் ராஜாமணி அய்யங்காா் தலைமையில் வேதமந்திரம் முழங்க யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டது. பின்னா் பெருமாள் பெரியவருக்கு சிறப்புப் பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் கீழ்க்குடி, திணையத்தூா், கீழ அரும்பூா், மாவூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com