கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்து மாணவா் பலி
By DIN | Published On : 17th September 2022 12:00 AM | Last Updated : 17th September 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் டியூசனுக்குச் சென்ற பள்ளி மாணவா் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்து வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள கழுகூரணி பாத்திமா நகரில் வசிப்பவா் கோபாலகிருஷ்ணன். இவா் அத்தியூத்து கிராம நிா்வாக அலுவலராக உள்ளாா். இவரது மகன் எழில்மாறன் (11) அங்குள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை மாலை எழில்மாறன் தனது சகோதரியுடன் டியூசனுக்கு சென்றாா். பின்னா் இரவு டியூசன் முடிந்ததும் கோபாலகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துவர அங்கு சென்றாா்.
அப்போது கழிவறைக்குச் சென்ற எழில்மாறன் அங்கிருந்த கழிவுநீா் தொட்டியின் மீது நடந்து சென்றபோது மூடி உடைந்ததில் அவா் தொட்டியில் விழுந்தாா்.
கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் மாணவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே எழில்மாறன் இறந்துவிட்டதாகக் தெரிவித்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.