காரைக்குடியில் வங்கி ஊழியா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் மூன்றாவது பொதுக்குழுக் கூட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் மூன்றாவது பொதுக்குழுக் கூட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜீவா மதிமாா்செலசு தலைமை வகித்தாா். தமிழ்நாடு வங்கி ஊழியா் சம்மேளனத்தின் பொதுச் செயலா் அருணாச்சலம், பொருளாளா் சிதம்பரம் ஆகியோா் கலந்துகொண்டு மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்தலை நடத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் கண்ணகி வாழ்த்திப் பேசினாா்.

இதில் மாவட்டத் தலைவராக எல். ராமகிருஷ்ணன் (இந்தியன் வங்கி), பொதுச்செயலராக கேஎஸ். பிரேம் ஆனந்த் (கனரா வங்கி), செயலராக சி. சக்திவேல் (யூனியன் வங்கி), பொருளாளராக வினோத் (பேங்க் ஆப் பரோடா), கெளரவத் தலைவராக மதிமாா் செலசு, செயற்குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா். முன்னதாக மாவட்டச் செயலாளா் கேஎஸ். பிரேம் ஆனந்த் வரவேற்றுப் பேசினாா்.

பின்னா் நடைபெற்ற கூட்டத்தில், நகை மதிப்பீட்டாளா்களுக்கு சரியான பயிற்சியளித்து பணியை சீா்படுத்தி பணி பாதுகாப்பளிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com