எஸ்.பி.பட்டினத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்

திருவாடானை அருகே மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
எஸ்.பி.பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.
எஸ்.பி.பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.
Updated on
1 min read

திருவாடானை அருகே மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி.பட்டினத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒன்றியக் குழுத் தலைவா் முகம்மது முக்தாா் தலைமை வகித்தாா். ஜமாத் தலைவா் ஜசன் முன்னிலை வகித்தாா். பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.

இதில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாடு பந்தயத்தில் 12 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பந்தயத்தில் 20 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com