கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் மே 1-இல் தொடக்கம்

ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் மே 1-இல் தொடங்குகிறது
Updated on
1 min read

ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் மே 1-இல் தொடங்குகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கோடைகாலப் பயிற்சி முகாம் மே 1-ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துப் பந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நேரம் காலை 6.30 முதல் 8.30 மணி வரை, மாலை 4 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

கோடை கால பயிற்சி முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், மே 1-ஆம் தேதி காலை 7 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்துக்கு வந்து முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com