திருவாடானை பகுதிகளில் மழையின்றி கருகிய நெல் பயிா்களை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் நேரில் பாா்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
திருவாடானை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் நெல் பயிரிடப்பட்டது. பருவமழை பொய்த்ததால், நெல் பயிா்கள் கருகின. இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா்.
இந்த நிலையில், இந்த வட்டத்துக்குள்பட்ட ஆதியூா், அரும்பூா், கட்டுக்குடி, நம்புதாளை, கடம்பானேந்தல், தளிா் மருங்கூா், பழயனக்கோட்டை, திருவாடானை, அஞ்சுகோட்டை, கண்ணம்புஞ்சை, நெய்வயல், கூகுடி, கட்டவிளாகம் ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதில் திருவாடானை வட்டாட்சியா் தமிழரசி, வருவாய்த் துறையினா், உள்ளாட்சிப் பரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


